Jul 10 2007
தமிழில் ஊர்ப் பெயர்
நம் நாடுகளில் இன்னும் பல ஊர்களுக்கு தமிழில் ஒரு பெயர், ஆங்கிலத்தில் ஒரு பெயர் என்று தானே இருக்கிறது?
அவனுக்கு வாயில் நுழைவதற்காக நாம் இன்னும் மாற்றாமல் இருக்கிறோம். அதே ஊர்க்காரன் ஒருவனிடம் முகவரி கேட்டு வருபவர் ஆங்கில பெயரைக் கேட்டால் ஊர்க்காரன் முழிப்பான். ஊர்க்காரனுக்கு ஆங்கிலம் தெரியாது என்று மற்றவர்கள் பழிப்பார்கள். ஏன்? யேர்மனியில், பிரான்சில், சப்பானில் என்ன தங்கள் ஊர்களின் பெயரை இப்படி இரு வேறாக பிரித்து வைத்திருக்கிறார்களா என்ன? நாம் இன்னும் அடிமைகளாக வாழ்ந்து அடிமைகளாக சிந்திக்கிறோம்.
பருத்தித்துரை = Point Pedro
மட்டக்களப்பு = Batticaloa
யாழ்ப்பாணம் = Jaffna
இப்படி பல ஊர்ப் பெயர்கள் தமிழில் ஒன்றாகவும் ஆங்கிலத்தில் ஒன்றாகவும் இருக்கிறது.
கனடாவில் கியூபெக் என்னும் பிரஞ்சு மக்கள் அதிகமாக குடியிருக்கும் மாகாணத்தில் உள்ள சில ஊர்ப் பெயர்கள்:
Notre-Dame-De-Lorette
Dollard-Des-Ormeaux
Côte-St-Luc
L’Ascension-De-Notre-Seigneur
Pierrefonds
Montréal
நாங்கள் சுதந்திரம் பெற்றுவிட்டோம் என்று மார்தட்டிக் கொண்டாலும் இன்னும் அடிமைக் குணம் போகவில்லையே.
தமிழீழத்தில் ஊர்ப் பெயர்கள் அந்த ஊரின் உண்மையான தமிழ்ப் பெயரிலேயே ஆங்கிலத்திலும் அழைக்கப்பட வேண்டும். மிகவும் நீளமான பெயர்கள் என்று கணிப்பிட்டால், தமிழ்ப் பெயரில் வரும் சொற்களில், அதிகமாகப் பயன்படுத்தப்படும் முதற் பாதி (அ) இறுதிப் பாதி சொல்லை ஆங்கிலத்தில் அழைக்கலாம். இது ஆங்கிலம் தெரியாதவர்களுக்குக் கூட தனது ஊரின்் பெயரைப் புரிந்துகொள்ளக் கூடியதாக இருக்கும்.
வீதிகளின் பெயர்களும் இவ்வாறே அமையவேண்டும்.
வீதிகளுக்கு மாவீரர்களின் பெயர்களைச் சூட்டலாம். அந்த தெருவில் வசித்த (அ) அந்த தெருவில் நடந்த சண்டையில் வீரச்சாவடைந்த முக்கியமான ஒரு மாவீரரின் பெயரைச் சூட்டலாம். எக்காரணங்் கொண்டும் அந்த தெருவிற்கு சம்பந்தமில்லாத மாவீரரின் பெயர் சூட்டப்படக்கூடாது.
மாவீரரின் பெயரை ஊர்ப் பெயருக்கு வைக்கக் கூடாது. எப்பொழுதும் ஊர்ப் பெயர் அந்த ஊரின் பொதுவான செயற்பாட்டை குறிக்குமுகமாக (அ) முக்கிய பூகோழ சின்னங்களுக்காக வைக்கப்படலாம்.
சேர்க்கப்பட்டது I [2007/07/19 @ காலை 9:00 GMT-5]:
எதிர்காலத்தில், ஊர்ப் பெயர், வீதிப் பெயர் மாற்றம் செய்யவேண்டும் என்றால், அது ஒரு இலகுவான காரியமாக அமையக் கூடாது. பல கட்ட செயற்பாடாக, பல அனுமதிகள் பெறவேண்டியதாக இருத்தல் வேண்டும். பெயர் மாற்றப்பட்டு ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு [50 வருடங்கள்?] மறுபடியும் பெயர் மாற்றம் கொண்டுவர முடியாததாக இருத்தல் வேண்டும். இல்லையேல் சில ஆண்டுகளுக்கு ஒரு முறை என பெயரை மாற்றிக்கொண்டே போய்விடுவார்கள்.
3 responses so far
1.பருத்தித்துறை _PRUTHTHI THU RAI. 2.MDDA KALLAPPU _ மட்டக்களப்பு 3. யாழ்ப்பாணம் _ YAALP PAANAM 4. 4.VAYAVILAN _வயாவிளான். தவறான பாவனையும் நடைமுறை எழுத்தும் உச்சரிப்புக்கழும் பின்வருமாறு:_ (1.உண்மை பெயர் “” வயாவிளான் _VAYAVILAN”") உண்மைக்குப் புறம்பான பெயர்க்ள்:_ !!!!!!!!!!!!வசாவிளான்VASAVILAN!!!! ????.!!!..ப்ருத்தித்துறைPOINT PEDRO!!!?????.!!!..மட்டக்களப்புBATTICALO!!!????…!!!யாழ்ப்பாணம்JAFFNA.!!!????? இது போன்று இன்னும் பல் உண்டு மீதமாக உள்ள வற்றை பின்பு எழுதுகின்றேன் இந்த எழுத்துக்களை நாங்கள் எழுதுங் அஞ்சல்(கடிதம்,தபால்) முகவரிப்பாவனையில் உபயோகித்தால் தானாக மாற்றப்பட்டுவிடும் இது ஆங்கிலேயனின் வாய்க்குள் நுளைவதற்காக ஏற்படுத்திக் கொண்ட ஒன்று இன்னும் ஏன்விட்டு வைக்கிறீர்கள்? இதுவும் எங்கள்தவறு ஏன்புரியாது இருக்கின்றார்களோ அவனுக்குத்தான் தெரியும், இவ்விடயத்திலாவது திருந்துவாகளோ இருந்துபார் போம் பாருங்கள். இவ்வண்ணம்கா.சிவா,பிறாண்ஸ்.நன்றி
தயவு செய்து ஒட்டுண்ணி வாழ்க்கை யெனவாழ்வோர் தாம் ” வயாவிளான் ” VAYAVILAN” எனும்பெயரைப் புறக்கணிப்பின் சற்றுச் சும்மாஇருந்து விடல்நன்றேயாம் எண்று அன்புடன் வேண்டிக்கொள்கின்றேன். இவ்வண்ணம்: கா.சிவா (பிறாண்ஸ்)
ஓர்மகற் கி(இ)ரு தாயானால், ஓர்ரூ(ஊ)ற் கி(இ)ரு பெயராய், ஆதலது முறையே யாம், ஆதலினாற் தாயொருத்தி தானிருக்க, தந்தைக் கோர் தாரம், தேடுமொரு வற்கந் தானெதற்கு, என்றறியாத் திணறுகின்றேன் கண்ணா, ஆதலினாற் தான் தெரிந்தோர், அன்புடனேசற்று விளக்கிடுதல் நன்றேயாம். “முறையேயாம்” @ இவ்வண்ணம்: கா.சிவா + பிறாண்ஸ்+